தவெக ஆட்சியமைக்க அமமுக ஆதரவு அளித்துள்ளதாக, ஆளுநரிடம் போலியான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோசடி செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என கேள்வி எழுப்பினார்.
தனது கட்சி எம்எல்ஏ பெயரில் கொடுக்கப்பட்ட ஆதரவு கடிதம் மோசடியானது என்றும், தவெக-வினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆளுநரிடம் வழங்கப்பட்ட அனைத்து ஆதரவு கடிதங்களையும் ஆராய வேண்டும் என்றும், அதிமுக-வை மட்டுமே தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
“எம்எல்ஏ காமராஜ் பெயரில் அளிக்கப்பட்ட போலி கடிதம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படும் எனறும் தினகரன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, காணாமல் போனதாக கூறப்பட்ட மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெக-வில் இருந்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனவும், தனது ஆதரவு அதிமுக-விற்கு மட்டுமே என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
















