திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்தார்.
சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை மீது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்தார்
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ரமேஷ், எம்ஆர்கே பன்னீர்செல்வம் எவ்வளவு அழகான திரைக்கதையை தயாரிப்பார் என்று இன்றுதான் தெரிந்துகொண்டதாகவும், போகிற போக்கில் 5 ஆண்டுகள் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கூறுவார் எனவும் விமர்சித்தார். திமுக ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்கு அமைப்போம் என்று கூறியது என்ன ஆச்சு எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடந்த ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்குகளை எங்கேயும் கட்டவில்லை என்று அமைச்சர் ரமேஷ் தவறான தகவலை வெளியிட்டார் என குற்றம்சாட்டினார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 18 மாவட்டங்களில் 54 இடங்களில் 725 கோடி ரூபாய் மதிப்பில் 383 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
















