கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு
Aug 24, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு

Web Desk by Web Desk
Aug 16, 2023, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு மாநிலங்களிலும் 58 பேர் உயிரிழந்தனர். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வளர்ச்சிப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று சுதந்திர தின விழா, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் இன்றி எளிமையாக நடத்தப்பட்டதாக சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

மேலும் , ‘‘மாநிலத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். மீட்புபணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள நைட் லைஃப் பாரடைஸ் கேம்ப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், இன்னும் 4 பேர் நிலச்சரிவில் சிக்கியிருப்பர் என அஞ்சப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில், மிக அதிக கனமழை கடந்த திங்கள் கிழமை பதிவாகியது. இங்கு கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை. நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில் சார்தாம் யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்கா-சிம்லா, கிரத்பூர் – மணாலி, பதன்கோட் – மாண்டி, தர்மசாலா- சிம்லா வழித்தடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து தடைப்பட்டது.

உத்தராகண்ட் ஜோஷிமத் பகுதியில் உள்ள சுனில் கிராமத்தில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மழையினால் பாதிப்படைந்த பகுதிகளைப்  பார்வையிட்ட உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மழை பாதிப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

Tags: Uttarakhand RainUttarakhand Rain issuerainRain In uttarakhandUttarakhandUttarakhand CM
ShareTweetSendShare
Previous Post

இந்தியா சுதந்திர தினம் – சர்வதேச நாடுகளில் கொண்டாட்டம்

Next Post

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்குத் தடை!

Related News

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies