கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு
Oct 10, 2025, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு

Web Desk by Web Desk
Aug 16, 2023, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு மாநிலங்களிலும் 58 பேர் உயிரிழந்தனர். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வளர்ச்சிப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று சுதந்திர தின விழா, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் இன்றி எளிமையாக நடத்தப்பட்டதாக சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

மேலும் , ‘‘மாநிலத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். மீட்புபணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள நைட் லைஃப் பாரடைஸ் கேம்ப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், இன்னும் 4 பேர் நிலச்சரிவில் சிக்கியிருப்பர் என அஞ்சப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில், மிக அதிக கனமழை கடந்த திங்கள் கிழமை பதிவாகியது. இங்கு கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை. நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில் சார்தாம் யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்கா-சிம்லா, கிரத்பூர் – மணாலி, பதன்கோட் – மாண்டி, தர்மசாலா- சிம்லா வழித்தடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து தடைப்பட்டது.

உத்தராகண்ட் ஜோஷிமத் பகுதியில் உள்ள சுனில் கிராமத்தில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மழையினால் பாதிப்படைந்த பகுதிகளைப்  பார்வையிட்ட உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மழை பாதிப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

Tags: rainRain In uttarakhandUttarakhandUttarakhand CMUttarakhand RainUttarakhand Rain issue
ShareTweetSendShare
Previous Post

இந்தியா சுதந்திர தினம் – சர்வதேச நாடுகளில் கொண்டாட்டம்

Next Post

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்குத் தடை!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies