கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு
Apr 19, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனமழை, நிலச்சரிவு : இமாச்சலில் 55 பேர் பலி உத்தரகண்ட்டில் 3 பேர் உயிரிழப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 16, 2023, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும், இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு மாநிலங்களிலும் 58 பேர் உயிரிழந்தனர். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இரு மாநிலங்களிலும் வளர்ச்சிப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று சுதந்திர தின விழா, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் இன்றி எளிமையாக நடத்தப்பட்டதாக சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

மேலும் , ‘‘மாநிலத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். மீட்புபணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், உத்தராகண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தில் உள்ள நைட் லைஃப் பாரடைஸ் கேம்ப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார், இன்னும் 4 பேர் நிலச்சரிவில் சிக்கியிருப்பர் என அஞ்சப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில், மிக அதிக கனமழை கடந்த திங்கள் கிழமை பதிவாகியது. இங்கு கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 10 பேரை காணவில்லை. நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

இந்நிலையில் சார்தாம் யாத்திரை 2 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்கா-சிம்லா, கிரத்பூர் – மணாலி, பதன்கோட் – மாண்டி, தர்மசாலா- சிம்லா வழித்தடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து தடைப்பட்டது.

உத்தராகண்ட் ஜோஷிமத் பகுதியில் உள்ள சுனில் கிராமத்தில் நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மழையினால் பாதிப்படைந்த பகுதிகளைப்  பார்வையிட்ட உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மழை பாதிப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

Tags: rainRain In uttarakhandUttarakhandUttarakhand CMUttarakhand RainUttarakhand Rain issue
ShareTweetSendShare
Previous Post

இந்தியா சுதந்திர தினம் – சர்வதேச நாடுகளில் கொண்டாட்டம்

Next Post

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்குத் தடை!

Related News

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies