லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியாவில் ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 பேர் பலி… 106 பேர் படுகாயம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில், எண்ணெய் வளம் மிக்க ஒன்றான லிபியாவில் அதிபர் கடாஃபி தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு நேட்டோ படையினரின் ஆதரவுடன் புரட்சி வெடித்தது. இதில் கடாஃபி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்து வருகிறது.

அதாவது, தலைநகர் திரிபோலியை மையமாகக் கொண்டு பிரதமர் அப்துல் ஹமீத் பெய்பா தலைமையில் ஒரு அரசு நடந்து வருகிறது. அதேசமயம், சிர்ட் கடற்கரை நகரை மையமாக வைத்து ஃபாதி பகாஷா என்பவர் தலைமையில் போட்டி அரசு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர், தன்னை பிரதமராக அறிவித்து செயல்பட்டு வருகிறார்.

இந்த இருவருமே தனித் தனியாக போராளிக் குழுவை வைத்திருக்கிறார்கள். இந்த இருக்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும், இது தவிர, முன்னாள் ராணுவத் தளபதி ஹைதாம் தஜோரி தலைமையிலான புரட்சியாளர்கள் படையணி என்னும் போராளிக் குழுவும், அப்தெல் கனி அல் கிக்லி தலைமையிலான மற்றொரு போராளிக் குழுவும் உள்ளன.

இக்குழுக்கள் அடிக்கடி மோதிக் கொள்வதன் காரணமாக, லிபியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இப்போராளிக் குழுக்களின் மோதல்களில், போராளிகளில் பலர் உயிரிழப்பதோடு, அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், திரிபோலியில் நேற்று இரு சக்தி வாய்ந்த குழுக்களுக்கிடையே நடந்த ஆயுதத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 106 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

444 படைப்பிரிவின் தளபதியாக இருப்பவர் மஹ்மூத் ஹம்சா. இவர், கடந்த 14-ம் தேதி விமானம் ஏறுவதற்காக, தெற்கு லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள முக்கிய விமான நிலையமான மிட்டிகாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், விமான நிலையத்தில் இருந்த சிறப்புத் தடுப்புப் படையினர், மஹ்மூத் ஹம்சாவை விமானம் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, கைதும் செய்தனர்.

இத்தகவல் மளமளவென 444 படைப்பிரிவினருக்குப் பரவியது. இதையடுத்து, அன்றைய தினம் இரவு விமான நிலையத்தில் குவிந்த 444 படைப்பிரிவினர், சிறப்புத் தடுப்புப் பிரிவினர் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தினர். இதற்கு சிறப்புப் படைப் பிரிவினரும் பதிலடி தாக்குதல் கொடுத்தனர். இதனால், விமான நிலையம் அமைந்திருந்த பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது.

இதைத் தொடர்ந்து, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஏற்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து நேற்று மோதல்கள் நிறுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இவர்களில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். அதேபோல, 106 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களிலும் ஏராளமானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: libiyaWARWar Time
ShareTweetSendShare
Previous Post

இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீப் மறைந்தார்.

Next Post

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies