பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டில் அரசு உயர் பதவி!
Oct 2, 2025, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டில் அரசு உயர் பதவி!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டின் அரசு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளில் ஒருவனாக அறியப்படுபவன் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற அமைப்பின் தலைவனாக இருந்து வருகிறான். வெளியுலக பார்வைக்கு இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை பெற்று தனிநாடாக வேண்டும் என்று வலியுறுத்துவது போல் தோன்றினாலும், பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறான். இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களே அவனை நம்பவில்லை.

மேலும், ஜம்மு காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவன். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. இந்து பண்டிட் சமூகத்தினர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தவன் இதே யாசின் மாலிக்தான். அதாவது, ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளில் முக்கியமானவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இதையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு இறுதியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சையதின் மகள் ரூபியை சையத்தை பணையக் கைதியாக கடத்தி வைத்துக்கொண்டு, மேற்கண்ட தீவிரவாதிகளை விடுவிக்கும்படி நிர்பந்தம் செய்தான். இதன்படி, முக்கிய தீவிரவாதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள்தான் 1990 தொடக்கத்தில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு வித்திட்டவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி செய்து வந்தான். இது தொடர்பான வழக்கில் கடந்தாண்டு யாசின் மாலிக்குக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இது தவிர, முப்தி முகமது சையதின் மகளை கடத்திய வழக்கில், தன்னை கடத்தியது யாசின் மாலிக்தான் என்று ரூபியா சையது அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த வழக்கிலும் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த நிலையில்தான், தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் அரசு உயர் பதவியை வழங்கி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக சமீபத்தில் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக அன்வரல் ஹக் காகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது உதவியாளராகத்தான் முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது அமைச்சருக்கு இணையான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

ஜி20 நாடுகளின் சுகாதாரக் கூட்டம் – இந்தியாவைப் பாராட்டிய உலக சுகாதார அமைப்பு

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார்: கிரேக் சேப்பல்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies