பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டில் அரசு உயர் பதவி!
Aug 17, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டில் அரசு உயர் பதவி!

Web Desk by Web Desk
Aug 20, 2023, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டின் அரசு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளில் ஒருவனாக அறியப்படுபவன் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற அமைப்பின் தலைவனாக இருந்து வருகிறான். வெளியுலக பார்வைக்கு இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை பெற்று தனிநாடாக வேண்டும் என்று வலியுறுத்துவது போல் தோன்றினாலும், பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறான். இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களே அவனை நம்பவில்லை.

மேலும், ஜம்மு காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவன். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. இந்து பண்டிட் சமூகத்தினர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தவன் இதே யாசின் மாலிக்தான். அதாவது, ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளில் முக்கியமானவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இதையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு இறுதியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சையதின் மகள் ரூபியை சையத்தை பணையக் கைதியாக கடத்தி வைத்துக்கொண்டு, மேற்கண்ட தீவிரவாதிகளை விடுவிக்கும்படி நிர்பந்தம் செய்தான். இதன்படி, முக்கிய தீவிரவாதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள்தான் 1990 தொடக்கத்தில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு வித்திட்டவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி செய்து வந்தான். இது தொடர்பான வழக்கில் கடந்தாண்டு யாசின் மாலிக்குக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இது தவிர, முப்தி முகமது சையதின் மகளை கடத்திய வழக்கில், தன்னை கடத்தியது யாசின் மாலிக்தான் என்று ரூபியா சையது அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த வழக்கிலும் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த நிலையில்தான், தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் அரசு உயர் பதவியை வழங்கி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக சமீபத்தில் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக அன்வரல் ஹக் காகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது உதவியாளராகத்தான் முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது அமைச்சருக்கு இணையான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

ஜி20 நாடுகளின் சுகாதாரக் கூட்டம் – இந்தியாவைப் பாராட்டிய உலக சுகாதார அமைப்பு

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார்: கிரேக் சேப்பல்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies