பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டில் அரசு உயர் பதவி!
Sep 2, 2026, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டில் அரசு உயர் பதவி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 20, 2023, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மனைவிக்கு பாகிஸ்தான் நாட்டின் அரசு உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகளில் ஒருவனாக அறியப்படுபவன் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்கிற அமைப்பின் தலைவனாக இருந்து வருகிறான். வெளியுலக பார்வைக்கு இந்தியா, பாகிஸ்தானிடமிருந்து ஜம்மு காஷ்மீர் விடுதலை பெற்று தனிநாடாக வேண்டும் என்று வலியுறுத்துவது போல் தோன்றினாலும், பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறான். இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களே அவனை நம்பவில்லை.

மேலும், ஜம்மு காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவன். குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. இந்து பண்டிட் சமூகத்தினர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தவன் இதே யாசின் மாலிக்தான். அதாவது, ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளில் முக்கியமானவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இதையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு இறுதியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சையதின் மகள் ரூபியை சையத்தை பணையக் கைதியாக கடத்தி வைத்துக்கொண்டு, மேற்கண்ட தீவிரவாதிகளை விடுவிக்கும்படி நிர்பந்தம் செய்தான். இதன்படி, முக்கிய தீவிரவாதிகள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள்தான் 1990 தொடக்கத்தில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு வித்திட்டவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதியுதவி செய்து வந்தான். இது தொடர்பான வழக்கில் கடந்தாண்டு யாசின் மாலிக்குக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இது தவிர, முப்தி முகமது சையதின் மகளை கடத்திய வழக்கில், தன்னை கடத்தியது யாசின் மாலிக்தான் என்று ரூபியா சையது அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த வழக்கிலும் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த நிலையில்தான், தீவிரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் அரசு உயர் பதவியை வழங்கி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக சமீபத்தில் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக அன்வரல் ஹக் காகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரது உதவியாளராகத்தான் முஷால் ஹூசைன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது அமைச்சருக்கு இணையான பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: pakistan
Share
Tweet
SendShare
Previous Post

ஜி20 நாடுகளின் சுகாதாரக் கூட்டம் – இந்தியாவைப் பாராட்டிய உலக சுகாதார அமைப்பு

Next Post

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார்: கிரேக் சேப்பல்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies