திட்டமிட்டபடி சந்திரயான்- 3 நாளை நிலவில் தரை இறங்கும்-இஸ்ரோ தகவல்!
May 20, 2025, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திட்டமிட்டபடி சந்திரயான்- 3 நாளை நிலவில் தரை இறங்கும்-இஸ்ரோ தகவல்!

Web Desk by Web Desk
Aug 22, 2023, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் இருந்து 70 கி.மீ தொலைவில் சுற்றிவரும் விக்ரம் லேண்டரில் உள்ள 4வது கேமரா மூலம் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ரூ.610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ‘சந்திரயான் – 3’ விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை  மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த, 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவைச் சுற்றி வருவதற்கான துாரத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகள், ஆகஸ்ட் 6, 9, 14 மற்றும் 16ம் தேதிகளில் வெற்றிகரமாக  மேற்கொள்ளப்பட்டன. சந்திரயான் – 3 விண்கலத்தின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள, ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்க உள்ள, ‘விக்ரம் லேண்டர்’ சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இந்த சாதனம் நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. நிலவை ஒட்டி லேண்டர் சுற்றி வருகிறது.

2019ல் ஏவப்பட்ட சந்திரயான் – 2 ஆர்பிட்டர் இப்போதும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இது ஏழு ஆண்டுகள் செயல்படும் திறன் உடையது. இந்த சந்திரயான் – 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் – 3 லேண்டர் சாதனம் இடையே இருவழி தகவல் தொடர்பு நேற்று வெற்றிகரமாக நிறுவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

…. and
The moon as captured by the
Lander Imager Camera 4
on August 20, 2023.#Chandrayaan_3 #Ch3 pic.twitter.com/yPejjLdOSS

— ISRO (@isro) August 22, 2023

இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை தரையிறக்கப்பட உள்ளது. விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டபடி நடக்கிறது. சந்திராயன்-3 விண்கலம் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நாளை மாலை 5:20 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது, விக்ரம் லேண்டர், திட்டமிட்டபடி நாளை மாலை 6:04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் தரையிறங்க்குகிறது.

லேண்டரில் உள்ள லேண்டர் பொஷிசன் டிடெக்சன் கேமரா மூலம் 70 கி.மீ., தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் அடங்கிய காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. லேண்டர் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து, ‘ரோவர்’ வாகனம் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

Tags: chandrayaan 3 latest newschandrayaan 3 moon missionchandrayaan 3 launch liveISROChandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

நிலவில் விழுந்து நொறுங்கிய லூனா -25 விண்கலம்- ரஷ்யா விளக்கம்!

Next Post

சென்னைத் தினத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies