தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி
Oct 5, 2025, 07:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Web Desk by Web Desk
Aug 22, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் என்கிற கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமை வகிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் 15-வது உச்சி மாநாட்டிற்கு தென்னாப்பிரிக்கா தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறது. ஆகவே, அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உச்சி மாநாடு இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இப்பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி, “தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா அழைப்பை ஏற்று, அங்கு நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று முதல் 24-ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.

பிரிக்ஸ் கூட்டமைப்பானது உறுப்பு நாடுகள் மத்தியில் பல்வேறு துறைகளிலும் வலுவான கூட்டுறவை மேம்படுத்தி வருகிறது. மேலும், ஒட்டுமொத்த தென் பிராந்தியத்தின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான களமாகவும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இந்த உச்சி மாநாடு, வருங்காலத்தில் பிரிக்ஸ் நாடுகள் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை மேம்படுத்தும் என்பதற்கு பயனுள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். மேலும், பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நான் சில உலகத் தலைவர்களுடன் இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசவுள்ளேன்.

பிரிக்ஸ் மாநாடு முடிந்த பிறகு, கிரீஸ் நாட்டு பிரதமர் க்ரியாகோஸ் மிட்சோடகிஸ் அழைப்பை ஏற்று 25-ம் தேதி அந்நாட்டுக்குச் செல்கிறேன். பழமையான கிரேக்க தேசத்துக்கு இது எனது முதல் பயணம். அதோடு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கத்துக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையையும் பெறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின் பிங் வருகை தந்திருக்கிறார். ஆகவே, இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modiprime minister narendra modi
ShareTweetSendShare
Previous Post

சென்னைத் தினத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மீண்டும் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies