தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி
Feb 15, 2026, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 22, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் என்கிற கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமை வகிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் 15-வது உச்சி மாநாட்டிற்கு தென்னாப்பிரிக்கா தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறது. ஆகவே, அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உச்சி மாநாடு இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இப்பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி, “தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா அழைப்பை ஏற்று, அங்கு நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று முதல் 24-ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.

பிரிக்ஸ் கூட்டமைப்பானது உறுப்பு நாடுகள் மத்தியில் பல்வேறு துறைகளிலும் வலுவான கூட்டுறவை மேம்படுத்தி வருகிறது. மேலும், ஒட்டுமொத்த தென் பிராந்தியத்தின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான களமாகவும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இந்த உச்சி மாநாடு, வருங்காலத்தில் பிரிக்ஸ் நாடுகள் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை மேம்படுத்தும் என்பதற்கு பயனுள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். மேலும், பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நான் சில உலகத் தலைவர்களுடன் இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசவுள்ளேன்.

பிரிக்ஸ் மாநாடு முடிந்த பிறகு, கிரீஸ் நாட்டு பிரதமர் க்ரியாகோஸ் மிட்சோடகிஸ் அழைப்பை ஏற்று 25-ம் தேதி அந்நாட்டுக்குச் செல்கிறேன். பழமையான கிரேக்க தேசத்துக்கு இது எனது முதல் பயணம். அதோடு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கத்துக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையையும் பெறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின் பிங் வருகை தந்திருக்கிறார். ஆகவே, இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modiprime minister narendra modi
ShareTweetSendShare
Previous Post

சென்னைத் தினத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மீண்டும் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

Related News

இந்து மன்னருக்கு பெருகும் ஆதரவு – நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி ?

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

நிஜ்ஜார் வழக்கில் கனடாவுடன் சேர்ந்து பணியாற்ற இந்தியா விருப்பம்!

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

30 ஆண்டுகளாக போராட்டம் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை!

வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சியிடமிருந்து 1,400 ஏக்கர் நிலத்தை மீட்க போராடிய விவசாயிகள் கைது!

தனியார் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மாணவர்களின் நிகழ்த்திய முருகர் நாடகம்.. பார்த்து வியந்த பார்வையாளர்கள்!

வெள்ளியங்கிரியில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

காங்கிரஸ் குறித்து தொடர்ந்து சர்ச்சை கருத்து -அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்க இருந்த கட்சி பொதுக்கூட்டங்கள் திடீர் ரத்து

இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த விருப்பம் -வங்கதேசத்தில் வென்ற BNP கட்சி அறிவிப்பு

மகா சிவராத்திரியை ஒட்டி திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

ஆட்சியில் பங்கு , அதிக சீட்டுகள் – மாணிக்கம் தாகூர் முன்னிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் ஆண்டு விழாவில் நடனம் ஆடி அசத்திய பிரபுதேவா!

ஏஐ 18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் – மைக்ரோசாப்ட் அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies