தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி
Sep 12, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 22, 2023, 05:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் என்கிற கூட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமை வகிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் 15-வது உச்சி மாநாட்டிற்கு தென்னாப்பிரிக்கா தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறது. ஆகவே, அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உச்சி மாநாடு இன்று தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இப்பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கும் பிரதமர் மோடி, “தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா அழைப்பை ஏற்று, அங்கு நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று முதல் 24-ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.

பிரிக்ஸ் கூட்டமைப்பானது உறுப்பு நாடுகள் மத்தியில் பல்வேறு துறைகளிலும் வலுவான கூட்டுறவை மேம்படுத்தி வருகிறது. மேலும், ஒட்டுமொத்த தென் பிராந்தியத்தின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான களமாகவும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இந்த உச்சி மாநாடு, வருங்காலத்தில் பிரிக்ஸ் நாடுகள் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை மேம்படுத்தும் என்பதற்கு பயனுள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். மேலும், பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நான் சில உலகத் தலைவர்களுடன் இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசவுள்ளேன்.

பிரிக்ஸ் மாநாடு முடிந்த பிறகு, கிரீஸ் நாட்டு பிரதமர் க்ரியாகோஸ் மிட்சோடகிஸ் அழைப்பை ஏற்று 25-ம் தேதி அந்நாட்டுக்குச் செல்கிறேன். பழமையான கிரேக்க தேசத்துக்கு இது எனது முதல் பயணம். அதோடு, 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கத்துக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்கிற பெருமையையும் பெறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின் பிங் வருகை தந்திருக்கிறார். ஆகவே, இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM Modiprime minister narendra modi
Share
Tweet
SendShare
Previous Post

சென்னைத் தினத்திற்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

மீண்டும் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies