வரலாறு படைத்தது இந்தியா!
Aug 20, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாறு படைத்தது இந்தியா!

மக்களின் பிரார்த்தனை பலித்தது… வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்தது சந்திரயான்-3: பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Aug 23, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு, நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான்-3 விண்கலம். இதன் மூலம் நிலவின் தென்துருவத்துக்கு முதன் முதலில் விண்கலத்தை அனுப்பிய வரலாற்றை இந்தியா படைத்திருக்கிறது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவின் வடதுருவத்தை ஆராய்வதற்காக விண்கலத்தை அனுப்பின. ஆனால், வித்தியாசமாக நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இந்தியா விண்கலத்தை அனுப்பியது. ஆனால், 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கடந்த 4 ஆண்டுகளாக கடுமையான முயற்சிக்குப் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தை உருவாக்கினர்.

சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்டது. புவி வட்டப் பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான்-3, கடந்த 1-ம் தேதி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. நிலவுப் பயணத்தில் 3ல் 2 பங்கு தூரத்தை கடந்த சந்திரயான்-3, கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை 6.04 மணியளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்கான முழு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காக இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தன. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், சந்திரயான்-3 பத்திரமாகத் தரையிறங்குவதற்காக கோவில்கலில் பிரார்த்தனை செய்தனர்.

Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3

Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.

Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3

— ISRO (@isro) August 23, 2023

இந்த நிலையில், திட்டமிட்டபடி, இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பபில் கால்பதித்து. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக சந்திரயான்-3 தரை இறங்கியதைப்  பார்த்துக் கொண்டிருந்த பாரதப் பிரதமர் மோடி, கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, சந்திரயான்-3 வெற்றிக்காகப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல, தலைவர்கள் பலரும், நாட்டு மக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: Chandrayaan 3pm modi latest speechPM Modi
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்-3 தரையிறக்கம்: கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை!

Next Post

நிலவை வென்றுவிட்டோம்: பிரதமர் மோடி

Related News

ரூ.1000 கோடிக்கு பெங்களூருவில் இடத்தை குத்தகைக்கு எடுத்த ஆப்பிள்!

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

காக்டூ ரக கிளிகளை பாதுகாக்கும் இந்தோனேசிய ஆர்வலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies