சந்திரயான்-3 தரையிறக்கம்: கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை!
Sep 4, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 தரையிறக்கம்: கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சந்திராயன்-3 விண்கலம் இன்று மாலை நிலவில் தரையிறக்கப்படுவதை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள், பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

நிலவை ஆய்வு செய்வதற்கு ஏற்கெனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பி இருக்கின்றன. இவை அனைத்துமே வட துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டவை. ஆனால், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக முதன் முதலில் விண்கலத்தை அனுப்பியது இந்தியாதான். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விட்டது.

இதையடுத்து, 4 ஆண்டு முயற்சிக்குப் பிறகு, சந்திராயன்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி இந்தியா அனுப்பியது. இதற்குப் போட்டியாக லூனா-25 என்கிற விண்கலத்தை கடந்த 10-ம் தேதி ரஷ்யா அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 21-ம் தேதி தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுப்பாட்டை இழந்த இந்த விண்கலம் 20-ம் தேதி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. இதனால், இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்தது.

எனினும், இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் நிலையில், இன்று மாலை சரியாக 6.04 மணியளவில் நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம் துரதிருஷ்டவசமாக கட்டுப்பாட்டை இழந்து விட்டதாலும், சமீபத்தில் ரஷ்யா அனுப்பிய லூனா விண்கலமும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விட்டதாலும், சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதேபோல, ரஷ்யாவின் லூனா-25 திட்டம் தோல்வியில் முடிந்ததால், இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் தரையிறக்கத்தை உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எதிர்பார்த்தபடியே விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன் பிறகு ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்படத் தொடங்கினால், அது இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படும். மேலும், நிலவின் தென் துருவத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியா என்று வரலாற்றிலும் இடம் கிடைக்கும். எனவே, ரஷ்யா தவறவிட்ட வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான், சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையில் இறங்க வேண்டும் என்று உலக நாடுகளில் வசிக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களும் அந்தந்த நாடுகளில் இருக்கும் கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல, இந்தியாலும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீமஹாகாலேஷ்வர் கோவிலில் பாஸ்மா ஆரத்தி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அதேபோல, சத்தர்பூரிலுள்ள பாபா பாகேஸ்வர் தாம் கோவிலிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் மொஹ்சின் ரசா, ஹஜ்ரத் ஸா மீனா ஷா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கியாரா முகி ஹனுமன் கோயில், புனேயில் உள்ள சித்தி விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மோன்ரோயில் உள்ள ஓம் ஸ்ரீசாய் பாலாஜி கோவில் மற்றும் கலாச்சார மையத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு கோவிலில் யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

Tags: Chaandrayaan 3chandrayaan 3 latest newschandrayaan 3 launch live
Share
Tweet
SendShare
Previous Post

நிலவில் சந்திரயான் தரையிறங்கியது போல் மணல் சிற்பம் வடிவமைப்பு!

Next Post

வரலாறு படைத்தது இந்தியா!

Related News

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies