வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு : கரூர் தி.மு.க.வினருக்கு ஜாமீன் மறுப்பு!
Aug 19, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு : கரூர் தி.மு.க.வினருக்கு ஜாமீன் மறுப்பு!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில், கரூர் தி.மு.க. பிரமுகர்களின் ஜாமீன் மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, தற்போது இலாகா இல்லா தி.மு.க. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2016 அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரும், அவரது தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் ஏராளமானோரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக,புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இந்த விவகாரத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றனர். அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், உள்ளூர் தி.மு.க.வினரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளைச் சோதனை நடத்த விடாமல் தடுத்துத் தாக்கியதோடு, அவர்களது வாகனத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.

இதில் காயமடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கரூர் காவல்துறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான தி.மு.க.வைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் 15 பேருக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 15 பேரின் ஜாமீனையும் ரத்து செய்த நீதிமன்றம், அவர்களை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது. அதன்படி, 15 பேரும் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரினார்கள். ஆனால், ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், 15 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, 15 பேரும் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பலமுறை மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி தனபால், தி.மு.க.வினரின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ShareTweetSendShare
Previous Post

100-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை – 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!

Next Post

சந்திரயான் -3 வெற்றி ! சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies