வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு : கரூர் தி.மு.க.வினருக்கு ஜாமீன் மறுப்பு!
Jul 27, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு : கரூர் தி.மு.க.வினருக்கு ஜாமீன் மறுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில், கரூர் தி.மு.க. பிரமுகர்களின் ஜாமீன் மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, தற்போது இலாகா இல்லா தி.மு.க. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2016 அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரும், அவரது தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் ஏராளமானோரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக,புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இந்த விவகாரத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றனர். அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், உள்ளூர் தி.மு.க.வினரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளைச் சோதனை நடத்த விடாமல் தடுத்துத் தாக்கியதோடு, அவர்களது வாகனத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.

இதில் காயமடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கரூர் காவல்துறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான தி.மு.க.வைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் 15 பேருக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 15 பேரின் ஜாமீனையும் ரத்து செய்த நீதிமன்றம், அவர்களை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது. அதன்படி, 15 பேரும் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரினார்கள். ஆனால், ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், 15 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, 15 பேரும் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பலமுறை மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி தனபால், தி.மு.க.வினரின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ShareTweetSendShare
Previous Post

100-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை – 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!

Next Post

சந்திரயான் -3 வெற்றி ! சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies