வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு : கரூர் தி.மு.க.வினருக்கு ஜாமீன் மறுப்பு!
Jun 11, 2026, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு : கரூர் தி.மு.க.வினருக்கு ஜாமீன் மறுப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில், கரூர் தி.மு.க. பிரமுகர்களின் ஜாமீன் மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, தற்போது இலாகா இல்லா தி.மு.க. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2016 அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரும், அவரது தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் ஏராளமானோரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக,புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இந்த விவகாரத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றனர். அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், உள்ளூர் தி.மு.க.வினரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளைச் சோதனை நடத்த விடாமல் தடுத்துத் தாக்கியதோடு, அவர்களது வாகனத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.

இதில் காயமடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கரூர் காவல்துறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான தி.மு.க.வைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் 15 பேருக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 15 பேரின் ஜாமீனையும் ரத்து செய்த நீதிமன்றம், அவர்களை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது. அதன்படி, 15 பேரும் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரினார்கள். ஆனால், ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், 15 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, 15 பேரும் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பலமுறை மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி தனபால், தி.மு.க.வினரின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ShareTweetSendShare
Previous Post

100-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை – 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!

Next Post

சந்திரயான் -3 வெற்றி ! சிறப்பு டூடுலை வெளியிட்டது கூகுள்!

Related News

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies