சட்டமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் அர்லேகரை சந்தித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்தார்.
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்காக மரபுப்படி சென்று அழைப்பு விடுத்தார். அப்போது ஆளுநருக்கு நடராஜர் சிலையை ஜே.சி.டி.பிரபாகர் பரிசாக வழங்கினார்.
















