டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார்.அதைத்தொடர்ந்து குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்தார்.அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவை சந்தித்தார்.
















