இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கியவர் பாரதிராஜா என்றும், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர் என கூறியுள்ளார்
திரைப்படங்களில் குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் அழகாக சித்தரித்தவர் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
















