கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்
Jun 11, 2026, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2026, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தேவையான மும்முனை மின்சாரம் கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்து சருகாகும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  இந்த ஆண்டிற்கான குறுவை சாகுபடி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இதுவரை நீர் திறந்துவிடப்படாத காரணத்தால், நடவு செய்த நெற்பயிர்களைக் காப்பாற்ற மோட்டார் பம்ப் செட்களையே பெரும்பாலான டெல்டா விவசாயிகள் நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தவெக ஆட்சியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களால், மும்முனை மின்சாரம் கிடைக்காமல் மோட்டார் பம்ப் செட்கள் எல்லாம் முடங்கிப் போய் கிடப்பது, தழைந்து வரும் நெற்பயிர்களையும், உழைத்துக் களைத்த விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர பாழாக்கி விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, சாதாரண பொதுமக்கள் முதல் நாட்டின் முக்கியத் தொழில்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் மின்வெட்டு பிரச்சனையை, முதல்வர் விஜய்  இனியும் அலட்சியமாகக் கையாளக் கூடாது என கூறியுள்ளார்.

“உபகரணங்கள் திருடுபோய்விட்டன, ஊரறிய புகார் கொடுத்துள்ளோம்” என்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைக் கூறி கடமையைத் தட்டிக் கழிக்காமல், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதுவரை மோட்டார் பம்ப் செட்கள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்க முன்வர வேண்டும். திமுக அரசைப் போல தவெக அரசும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து விடக் கூடாது என்பதை முதல்வருக்கு கோரிக்கையாகவே முன்வைக்கிறேன் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: nainar nagendran interviewBJP State President Nainar Nagendran nainar nagendran on epspwer cutVijaytvkNainar Nagendran speechnainar nagendran statement
ShareTweetSendShare
Previous Post

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

Related News

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

சட்டப்பேரவை கூட்டம் – ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்11-வது கவுன்சில் கூட்டம் – முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்!

பயணிகள் விமானங்கள் இந்தியா தயாரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டம் – அதிக நாட்கள் பிரதமர் என்ற சாதனை படைத்த மோடிக்கு பாராட்டு!

தமிழ் ஜனம் உள்ளிட்ட செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? – எல்.முருகன் கண்டனம்!

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

குழந்தைகள் மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரம் – தலைவறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது கைது!

நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இளையராஜா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

அது எப்படி அவர்களுக்கு மட்டும் தொழில்நுட்ப பிரச்னை வரும் – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies