சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தினமும் 5 மணி நேரம் சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவராக உதயநிதிக்கு முதல் கூட்டத்தொடர் என்பதால் திமுகவினர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்கட்சி தலைவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் முதலமைச்சர் வீட்டிற்கு சென்று அறிக்கை வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினரின் வாயை அடைக்க, துறை சார்ந்த விவாதங்களை எப்படி முன்வைக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் விஜய் பயிற்சி எடுத்து வரும் நிலையில், இந்த தகவலை அறிந்த உதயநிதியும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேகதாது அணை விவகாரம், மின்வெட்டு, சட்டம் – ஒழுங்கு ஆகிய பிரச்னைகளை பேச உதயநிதிக்கு முன்னாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பயிற்சி அளிப்பதாகவும், இதற்காக உதயநிதி தினமும் 5 மணி நேரம் பயிற்சி எடுத்து வருவதாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
















