டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். அதன்படி, தமிழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
தொழில்முனைவோரை ஊக்குவித்தல், டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மாநிலங்களின் வளர்ச்சி இலக்குகளை தேசிய இலக்குகளுடன் ஒருங்கிணைத்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் பரிந்துரைகளும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















