மத்தியில் பிரதமர் மோடி பதவிக்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, அவருக்கு டெல்லி பாரத் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
நாட்டின் நீண்ட கால பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ள நிலையில், அவருக்கு என்டிஏ கூட்டணி தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக தலைவர் அன்புமணி, சிவசேனா ஷிண்டே பிரிவு தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு மத்தியில் விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட காரப்பொறியை அங்கிருந்தவர்களுக்குப் பகிர்ந்து பிரதமர் மோடி உபசரித்தார்.
















