பாஜக பிரமுகர் அலிஷா அப்துல்லா அளித்த புகாரின்பேரில், யூடியூபர் முக்தார் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூபர் முக்தார் அகமதுவும், திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவும் தனது கண்ணியம் குறித்து ஆபாசமாக பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அலிஷா அப்துல்லா அண்மையில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா சிவாவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த முக்தார் அகமதுவையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
















