முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, நாட்டின் மிக நீண்டகால பிரதமர் என்ற சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் மோடி, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் வென்று தொடர்ச்சியாக 3 முறை பிரதமர் பதவியைத் தக்கவைத்து, 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதையொட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமர் மோடி மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இந்தச் சாதனை பறைசாற்றுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி வெளியிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடி தனக்கு ரோல் மாடலாக இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளார்.
இதேபோல பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த டிரினிடாட் அன்ட் டொபாகோ பிரதமர் கமலா பிரசாத், பிரதமர் மோடி தலைமையின்கீழ், சர்வதேச அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேபோல பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அண்மையில் ரோமில் பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சிகரமான தருணமாக அமைந்ததாக கூறியுள்ளார்.
















