நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சுரப்பான், கரப்பான் என வருவதாகவும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் தெரிவித்தார்.
இந்து மிஷன் சுகாதாரத்துறை சார்பில் சென்னை நங்கநல்லூரில், புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்து சிறப்பித்தார். அதன்பின் இந்து சமுதாய கூடத்தில் பக்தர்களுக்கு ஆசியுடன் பிரசாதம் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், மத்திய அரசு மருத்துவ படிப்பின் எண்ணிக்கையை அதிகரித்தாலும் வெளிநாடுகளுக்கும் சென்று படிப்பதாகத் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே உயர் கல்வி, மருத்துவம் போன்ற படிப்புகளை படிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சுரப்பான், கரப்பான் என வருகிறார்கள் என்றும் ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் தெரிவித்தார்.
















