இந்தியாவின் தேஜாஸ் - அஸ்த்ரா சோதனை வெற்றி!
Aug 24, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் தேஜாஸ் – அஸ்த்ரா சோதனை வெற்றி!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், நேற்று புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை முயற்சியை வெற்றிகரமாக முடித்திருக்கிறது.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, இராணுவத் தளவாடங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தேஜாஸ் எனப்படும் இலகு ரக போர் விமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போர் விமானத்தின் மூலம் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணை வாயிலாகத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலக்குகளை குறிவைத்து துல்லியமாகத் தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை, தேஜாஸ் மூலம் நேற்றுச் சோதனை செய்யப்பட்டது. கோவை கடற்கரைக்கு அருகே 20,000 அடி உயரத்தில் பறந்தபடியே தேஜாஸ் போர் விமானம் அஸ்த்ரா ஏவுகணையை ஏவியது. இது, குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததின் மூலம் இந்தியா இன்னொரு மைல் கல்லை எட்டி இருக்கிறது. நேற்று சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கி, இந்தியா புதிய சகாப்தம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

தேஜாஸ் சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கும் பதிவில், “தேஜாஸ் போர் விமானத்தின் திறனை வெளிப்படுத்துவதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மேலும், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே உருவாக்க முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் ஏரோநாட்டிகல் வளர்ச்சி ஏஜென்சி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் சோதனை இயக்குனர் மற்றும் விஞ்ஞானிகளும், இந்திய ராணுவ விமான தகுதி மற்றும் சான்றளிப்பு மையத்தின் அதிகாரிகளும் இச்சோதனை ஏவுதலைக் கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை அதிநவீன பி.வி.ஆர். வகையைச் சேர்ந்ததாகும். இது ஆகாயத்திலிருந்து போர் விமானம் மூலம் தாக்கக்கூடிய வான்வழி ஏவுகணையாகும், இது மிகவும் கடினமான சூப்பர்சோனிக் வான்வழி இலக்குகளைக்கூடத் திறனோடு எதிர்கொண்டு அழிக்கவல்லது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், இமராட் ஆராய்ச்சி மையம் மற்றும் டி.ஆர்.டி.ஓ.-வின் பிற ஆய்வகங்களால் கூட்டாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நமது உள்நாட்டு தேஜாஸ் போர் விமானங்களிலிருந்து தாக்கக் கூடிய உள்நாட்டு அஸ்த்ரா பி.வி.ஆர். ஏவுகணை நரேந்திர மோடி அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னம்பிக்கை இந்தியா) திட்டத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: India
ShareTweetSendShare
Previous Post

தி.மு.கவுக்கு எதிராக அண்ணாமலையின் அடுத்த அதிரடி – முழு விவரம்

Next Post

ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்

Related News

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies