இந்தியாவின் தேஜாஸ் - அஸ்த்ரா சோதனை வெற்றி!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் தேஜாஸ் – அஸ்த்ரா சோதனை வெற்றி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், நேற்று புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை சோதனை முயற்சியை வெற்றிகரமாக முடித்திருக்கிறது.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, இராணுவத் தளவாடங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தேஜாஸ் எனப்படும் இலகு ரக போர் விமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போர் விமானத்தின் மூலம் இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணை வாயிலாகத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலக்குகளை குறிவைத்து துல்லியமாகத் தாக்கும் அஸ்த்ரா ஏவுகணை, தேஜாஸ் மூலம் நேற்றுச் சோதனை செய்யப்பட்டது. கோவை கடற்கரைக்கு அருகே 20,000 அடி உயரத்தில் பறந்தபடியே தேஜாஸ் போர் விமானம் அஸ்த்ரா ஏவுகணையை ஏவியது. இது, குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததின் மூலம் இந்தியா இன்னொரு மைல் கல்லை எட்டி இருக்கிறது. நேற்று சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கி, இந்தியா புதிய சகாப்தம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

தேஜாஸ் சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கும் பதிவில், “தேஜாஸ் போர் விமானத்தின் திறனை வெளிப்படுத்துவதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மேலும், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே உருவாக்க முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் ஏரோநாட்டிகல் வளர்ச்சி ஏஜென்சி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் சோதனை இயக்குனர் மற்றும் விஞ்ஞானிகளும், இந்திய ராணுவ விமான தகுதி மற்றும் சான்றளிப்பு மையத்தின் அதிகாரிகளும் இச்சோதனை ஏவுதலைக் கண்காணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணை அதிநவீன பி.வி.ஆர். வகையைச் சேர்ந்ததாகும். இது ஆகாயத்திலிருந்து போர் விமானம் மூலம் தாக்கக்கூடிய வான்வழி ஏவுகணையாகும், இது மிகவும் கடினமான சூப்பர்சோனிக் வான்வழி இலக்குகளைக்கூடத் திறனோடு எதிர்கொண்டு அழிக்கவல்லது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், இமராட் ஆராய்ச்சி மையம் மற்றும் டி.ஆர்.டி.ஓ.-வின் பிற ஆய்வகங்களால் கூட்டாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நமது உள்நாட்டு தேஜாஸ் போர் விமானங்களிலிருந்து தாக்கக் கூடிய உள்நாட்டு அஸ்த்ரா பி.வி.ஆர். ஏவுகணை நரேந்திர மோடி அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னம்பிக்கை இந்தியா) திட்டத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: India
ShareTweetSendShare
Previous Post

தி.மு.கவுக்கு எதிராக அண்ணாமலையின் அடுத்த அதிரடி – முழு விவரம்

Next Post

ரங்கோலியில் சந்திரயான்! – அசத்திய புதுச்சேரி பெண்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies