இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!
Jul 22, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தியா கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஏற்படுத்திய கட்டளைகள்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2023, 08:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக பெரிய தொடரில் விளையாடாமல் போனது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களில் மூன்று பெரிய தொடர் அடுத்தடுத்து நடக்க உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என மூன்று முக்கிய தொடர்கள் வரிசையாக வருகிறது. இதில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையாவது வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கு வீரர்களின் உடல் தகுதி முக்கியம் என்பதால் கடந்த காலங்களில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ தற்போது வீரர்களுக்கு ஆறு கட்டளைகளை விடுத்திருக்கிறது. அதன்படி இந்த ஆறு கட்டளைகளையும் பின்பற்றி இருக்கிறார்களா என்பதை கண்காணித்து சோதனையின் மூலம் உறுதிப்படுத்திய பிறகு அணியில் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி ஒவ்வொரு வீரர்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும். அதன் பிறகு ஓய்வு நேரத்தில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை அடுத்து வீரர்கள் நடைபயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள யோகா பயிற்சியை வீரர்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நீச்சல் பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும். இதனைத் தொடர்ந்து மாவு சத்துப் பொருட்களை குறைத்துக் கொண்டு புரதச்சத்து உள்ள பொருட்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கண்டிப்பாக ஒவ்வொரு வீரர்களும் பின்பற்ற வேண்டும். இதை மருத்துவக் குழு கண்காணித்து பிசிசிஐக்கு அறிக்கை அனுப்பும். இதில் ஏதேனும் குறை இருந்தால் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. வீரர்கள் உடல் தகுதியுடன் இருப்பதற்கே இப்படி ஒரு கட்டளைகளை பிசிசிஐ பிறப்பித்துள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உலககோப்பைக்கு கே.எல்.ராகுல்லின் உடற்தகுதி கண்காணிப்பில் உள்ளது!

Next Post

மதுரை அருகே ரயிலில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி! – 25 பேர் படுகாயம்!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies