மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!
Jul 29, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் தத்தாபுகூர் நீல்கஞ்ச் பகுதியில் 2 மாடி கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சுமார் 10.40 மணியளவில் அந்த பட்டாசு ஆலைக் கட்டடம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இச்சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து விட்டார்கள்.

அதேசமயம், சிகிச்சை பெறுபவர்களில் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், விபத்தில் பலியான பலரது உடல் அக்கம்பக்கத்து கட்டங்களில் சிதறிக் கிடப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல, இந்த வெடி விபத்தில் அருகிலிருந்து சில வீடுகளும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன.

இச்சம்பவம் குறித்து மேற்குவங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரத்தின் கோஷ் கூறுகையில், “வெடி விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பட்டாசுகள் தயாரிக்கப்படும் பகுதி அல்ல. இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள நீல்கஞ்ச்சின் நாராயண்பூர் பகுதியில்தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றையும் காவல்துறையினர் மூடிவிட்டனர்” என்றார்.

மேற்குவங்க மாநிலத்தில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த மே மாதம் மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த பாட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதே மே மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டம் நோடகாலி பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.

Tags: west bengal
ShareTweetSendShare
Previous Post

2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!

Next Post

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

Related News

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies