மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!
Jul 6, 2025, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Web Desk by Web Desk
Aug 28, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் தத்தாபுகூர் நீல்கஞ்ச் பகுதியில் 2 மாடி கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சுமார் 10.40 மணியளவில் அந்த பட்டாசு ஆலைக் கட்டடம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இச்சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து விட்டார்கள்.

அதேசமயம், சிகிச்சை பெறுபவர்களில் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், விபத்தில் பலியான பலரது உடல் அக்கம்பக்கத்து கட்டங்களில் சிதறிக் கிடப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல, இந்த வெடி விபத்தில் அருகிலிருந்து சில வீடுகளும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன.

இச்சம்பவம் குறித்து மேற்குவங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரத்தின் கோஷ் கூறுகையில், “வெடி விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பட்டாசுகள் தயாரிக்கப்படும் பகுதி அல்ல. இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள நீல்கஞ்ச்சின் நாராயண்பூர் பகுதியில்தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றையும் காவல்துறையினர் மூடிவிட்டனர்” என்றார்.

மேற்குவங்க மாநிலத்தில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த மே மாதம் மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த பாட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதே மே மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டம் நோடகாலி பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.

Tags: west bengal
ShareTweetSendShare
Previous Post

2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!

Next Post

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies