மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 03:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் தத்தாபுகூர் நீல்கஞ்ச் பகுதியில் 2 மாடி கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சுமார் 10.40 மணியளவில் அந்த பட்டாசு ஆலைக் கட்டடம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இச்சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து விட்டார்கள்.

அதேசமயம், சிகிச்சை பெறுபவர்களில் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், விபத்தில் பலியான பலரது உடல் அக்கம்பக்கத்து கட்டங்களில் சிதறிக் கிடப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல, இந்த வெடி விபத்தில் அருகிலிருந்து சில வீடுகளும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன.

இச்சம்பவம் குறித்து மேற்குவங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரத்தின் கோஷ் கூறுகையில், “வெடி விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பட்டாசுகள் தயாரிக்கப்படும் பகுதி அல்ல. இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள நீல்கஞ்ச்சின் நாராயண்பூர் பகுதியில்தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றையும் காவல்துறையினர் மூடிவிட்டனர்” என்றார்.

மேற்குவங்க மாநிலத்தில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த மே மாதம் மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த பாட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதே மே மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டம் நோடகாலி பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.

Tags: west bengal
Share
Tweet
SendShare
Previous Post

2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!

Next Post

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies