மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!
Apr 23, 2026, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் தத்தாபுகூர் நீல்கஞ்ச் பகுதியில் 2 மாடி கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆலையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சுமார் 10.40 மணியளவில் அந்த பட்டாசு ஆலைக் கட்டடம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இச்சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்து விட்டார்கள்.

அதேசமயம், சிகிச்சை பெறுபவர்களில் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், விபத்தில் பலியான பலரது உடல் அக்கம்பக்கத்து கட்டங்களில் சிதறிக் கிடப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதேபோல, இந்த வெடி விபத்தில் அருகிலிருந்து சில வீடுகளும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன.

இச்சம்பவம் குறித்து மேற்குவங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரத்தின் கோஷ் கூறுகையில், “வெடி விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பட்டாசுகள் தயாரிக்கப்படும் பகுதி அல்ல. இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள நீல்கஞ்ச்சின் நாராயண்பூர் பகுதியில்தான் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றையும் காவல்துறையினர் மூடிவிட்டனர்” என்றார்.

மேற்குவங்க மாநிலத்தில் பட்டாசு வெடிவிபத்து நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த மே மாதம் மிட்னாபூர் மாவட்டத்தில் நடந்த பாட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதே மே மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கடந்தாண்டு டிசம்பர் மாதம் 24 தெற்கு பர்கானாஸ் மாவட்டம் நோடகாலி பகுதியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்கதையாகி வருகிறது.

Tags: west bengal
ShareTweetSendShare
Previous Post

2ஜியோ, 4ஜியோ அல்ல… பா.ஜ.க.தான் ஆட்சி அமைக்கும்: தெலங்கானாவில் அமித்ஷா உறுதி!

Next Post

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies