2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!
Apr 23, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030-ம் ஆண்டுக்குள் 13 முதல் 14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு “ரோஜ்கர் மேளா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக “ரோஜ்கர் மேளா” நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 8-வது ரோஜ்கர் மேளா இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மோடி, “நமது இளைஞர்களுக்கு புதிய வழிகளை திறக்கும்வகையில், துணை இராணுவப் படையில் ஆள் சேர்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் ஜன்தன் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம். இது நிதி தொடர்பான நன்மைகள் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

2030-ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கும். இதன் மூலம் 13 முதல் 14 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆட்டோ மொபைல், மருத்துவத்துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் 10 ஆண்டுகளில் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்த வாக்குறுதியை நான் கொடுக்கும்போது, அதற்கான முழுப் பொறுப்பும் எனக்கு உண்டு.

வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு அனைத்து துறைகளின் பங்களிப்பும் முக்கியமாகும். உணவு முதல் மருந்து வரையிலும், விண்வெளியில் இருந்து ஸ்டார் அப்கள் வரையிலும், அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் வளர வேண்டியது அவசியமாகும். 13 உள்ளூர் மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது” என்றார்.

Tags: PM Modipm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Next Post

ஆடவர் 4×400 ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம் இடம் பிடித்த இந்தியா!

Related News

பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!

சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்திற்கு திரண்ட மக்கள் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – நயினார், அணணாமலை வாக்களித்தனர்!

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37. 56 % வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவவை தேரதல் – இபிஎஸ், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மக்கள் சாதனை அளவிலான வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies