2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!
Jun 14, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030-ம் ஆண்டுக்குள் 13 முதல் 14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு “ரோஜ்கர் மேளா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக “ரோஜ்கர் மேளா” நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 8-வது ரோஜ்கர் மேளா இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மோடி, “நமது இளைஞர்களுக்கு புதிய வழிகளை திறக்கும்வகையில், துணை இராணுவப் படையில் ஆள் சேர்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் ஜன்தன் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம். இது நிதி தொடர்பான நன்மைகள் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

2030-ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கும். இதன் மூலம் 13 முதல் 14 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆட்டோ மொபைல், மருத்துவத்துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் 10 ஆண்டுகளில் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்த வாக்குறுதியை நான் கொடுக்கும்போது, அதற்கான முழுப் பொறுப்பும் எனக்கு உண்டு.

வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு அனைத்து துறைகளின் பங்களிப்பும் முக்கியமாகும். உணவு முதல் மருந்து வரையிலும், விண்வெளியில் இருந்து ஸ்டார் அப்கள் வரையிலும், அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் வளர வேண்டியது அவசியமாகும். 13 உள்ளூர் மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது” என்றார்.

Tags: PM Modipm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Next Post

ஆடவர் 4×400 ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம் இடம் பிடித்த இந்தியா!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies