2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!
Jul 29, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030-ம் ஆண்டுக்குள் 13 முதல் 14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு “ரோஜ்கர் மேளா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக “ரோஜ்கர் மேளா” நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 8-வது ரோஜ்கர் மேளா இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மோடி, “நமது இளைஞர்களுக்கு புதிய வழிகளை திறக்கும்வகையில், துணை இராணுவப் படையில் ஆள் சேர்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் ஜன்தன் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம். இது நிதி தொடர்பான நன்மைகள் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

2030-ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கும். இதன் மூலம் 13 முதல் 14 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆட்டோ மொபைல், மருத்துவத்துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் 10 ஆண்டுகளில் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்த வாக்குறுதியை நான் கொடுக்கும்போது, அதற்கான முழுப் பொறுப்பும் எனக்கு உண்டு.

வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு அனைத்து துறைகளின் பங்களிப்பும் முக்கியமாகும். உணவு முதல் மருந்து வரையிலும், விண்வெளியில் இருந்து ஸ்டார் அப்கள் வரையிலும், அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் வளர வேண்டியது அவசியமாகும். 13 உள்ளூர் மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது” என்றார்.

Tags: PM Modipm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Next Post

ஆடவர் 4×400 ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம் இடம் பிடித்த இந்தியா!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies