2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!
Aug 18, 2025, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030-க்குள் 14 கோடி வேலைவாய்ப்பு: பிரதமர் மோடி உறுதி!

கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது.

Web Desk by Web Desk
Aug 28, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030-ம் ஆண்டுக்குள் 13 முதல் 14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். இத்திட்டத்திற்கு “ரோஜ்கர் மேளா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகளில் பணி வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக “ரோஜ்கர் மேளா” நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 8-வது ரோஜ்கர் மேளா இன்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து பேசிய மோடி, “நமது இளைஞர்களுக்கு புதிய வழிகளை திறக்கும்வகையில், துணை இராணுவப் படையில் ஆள் சேர்ப்பு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் ஜன்தன் யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம். இது நிதி தொடர்பான நன்மைகள் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

2030-ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை இந்திய பொருளாதாரத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் பங்களிக்கும். இதன் மூலம் 13 முதல் 14 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆட்டோ மொபைல், மருத்துவத்துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வரும் 10 ஆண்டுகளில் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்த வாக்குறுதியை நான் கொடுக்கும்போது, அதற்கான முழுப் பொறுப்பும் எனக்கு உண்டு.

வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு அனைத்து துறைகளின் பங்களிப்பும் முக்கியமாகும். உணவு முதல் மருந்து வரையிலும், விண்வெளியில் இருந்து ஸ்டார் அப்கள் வரையிலும், அனைத்து துறைகளும் பொருளாதாரத்தில் வளர வேண்டியது அவசியமாகும். 13 உள்ளூர் மொழிகளில் தேர்வு நடத்தப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த 9 ஆண்டுகளில் உட்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்திருக்கிறது” என்றார்.

Tags: PM Modipm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

மேற்குவங்க பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 8 பேர் பரிதாப பலி!

Next Post

ஆடவர் 4×400 ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம் இடம் பிடித்த இந்தியா!

Related News

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

Load More

அண்மைச் செய்திகள்

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

என்டிஏ குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவிப்பு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies