30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் "இரவு வாழ்க்கை"!
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் “இரவு வாழ்க்கை”!

பாரதப் பிரதமர் நரேந்தி மோடியால், காஷ்மீர் மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது.

Murugesan M by Murugesan M
Aug 29, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரவு வாழ்க்கைத் திரும்பி இருக்கிறது. இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த காலங்களில் ”நித்திய கண்டம் பூரண ஆயுசு” என்கிற கதையாகத்தான் மக்கள் வசித்து வந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதே தெரியாது. திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களோடு வரும், மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்று விடும். இதில், அப்பாவி மக்கள் உயிரிழந்ததுதான் மிச்சம். அந்தளவுக்கு தீவிரவாதம் தலைவிரித்தாடியது. இதில், உச்சக்கட்டக் கொடுமை என்னவென்றால், 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த படுகொலைதான்.

ஆயுதங்களோடு வந்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பல், அம்மாநிலத்தில் சிறுபான்மையினரான இந்து பண்டிட்களையும், கிறிஸ்தவர்களையும் சுற்றி வளைத்தது. ஒன்று மதம் மாறுங்கள் அல்லது ஊரைக் காலி செய்துவிட்டுச் செல்லுங்கள். இல்லையென்றால் உயிரை விடுங்கள் என்று அறைகூவல் விடுத்தது. அவ்வாறு மதம் மாற மறுத்தவர்களையும், ஊரைக் காலி செய்ய மறுத்தவர்களையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தது. உயிருக்கு பயந்த மக்கள் வீடு, நிலம், சொத்து, சுகம் அத்தனையும் விட்டு விட்டு ஓடி வந்தனர். இதன் பிறகாவதுத் தீவிரவாதம் குறைந்ததா என்றால், அதுதான் இல்லை. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது அரிதிலும் அரிதானது. அதோடு, இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம். மக்கள் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை என்பதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படும்.

இந்த நிலை மாற அம்மாநில மக்களுக்கு 30 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. ஆம், கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதன் பிறகு, தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இராணுவம், துணை ராணுவம், மாநில காவல்துறை என 3 பாதுகாப்புப் பிரிவினரையும் களமிறக்கியது. இதன் பிறகு, ஏராளமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடங்க மறுத்து திமிரியவர்கள் வேட்டையாடப்பட்டனர். இதனால், தீவிரவாதமும், தீவிரவாதிகளும் படிப்படியாகக் குறையத் தொடங்கினர். மக்களும் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஊரைக் காலி செய்துவிட்டுத் தப்பி ஓடி வந்த மக்களும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதனால், 77-வது சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், பகல் வாழ்க்கை மட்டுமல்லாது இரவு வாழ்க்கையும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இரவு நேரங்களில் பொதுவெளியில் நடமாடத் தொடங்கி இருக்கிறார்கள். இதுகுறித்து காஷ்மீரி மக்கள் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கூட, பகல் நேரங்களில் கூட வீட்டை விட்டு வெளியே வரத் தயக்கமாக இருந்தது. இரவு நேரங்களில் சுத்தமாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக கடந்த காலங்களில் இருந்த அச்சம் முற்றிலுமாக மாறி விட்டது. இப்போதுதான் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறோம்” என்று உற்சாகத்துடன் பொது மக்கள் கூறுகின்றனா்.

அதேபோல, பழைய நகரத்தைச் சேர்ந்த கடைக்காரர் மக்பூல் பட் கூறுகையில், “நீண்ட காலத்திற்கு முன்பு, சூரிய அஸ்தமனத்துடன் நிலவிய பயமும், அச்சுறுத்தலும் மறைந்துவிட்டன. துப்பாக்கிகள் மற்றும் கையெறிக் குண்டுகளை ஏந்திய தீவிரவாதிகள் மற்றும் கற்களைச் சுமந்துச் செல்லும் கும்பல் கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது” என்றார். எப்படியோ பாரதப் பிரதமர் நரேந்தி மோடியால், காஷ்மீர் மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது எனக் கூறினாா்.

Tags: PM Modijamukasmir
ShareTweetSendShare
Previous Post

மோடி கொடுத்த ரக்சா பந்தன் பரிசு: கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு!

Next Post

இம்ரான் கான் தண்டனை நிறுத்திவைப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies