சீன உளவுக் கப்பல் வருகை: இலங்கைக்கு ராஜ்நாத் சிங் திடீர் பயணம்!
Jul 4, 2025, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன உளவுக் கப்பல் வருகை: இலங்கைக்கு ராஜ்நாத் சிங் திடீர் பயணம்!

Web Desk by Web Desk
Aug 30, 2023, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சீனாவின் ஆய்வுக் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்திருக்கும் நிலையில், ராஜ்நாத் சிங் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த இலங்கைத் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டிற்குச் சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல. காரணம், இலங்கைக்கு அந்தளவுக்கு சீனா கடன்களை வாரி வழங்கி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி, இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி, 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இது வெளித்தோற்றத்துக்கு துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறப்பட்டாலும், தங்களது உளவுக்கப்பலை இத்துறைமுகத்தில் நிலைநிறுத்தி இந்தியாவை உளவுப் பார்ப்பதுதான் சீனாவின் நோக்கம்.

இந்த சூழலில், இலங்கை கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து திவாலானது. அப்போது, அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் நிதியுதவி மற்றும் பொருளுதவி உட்படப் பல்வேறு வகையிலும் இந்தியா உதவிச் செய்தது. உணவுப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனா மீண்டும் ஏராளமான கடன்களை இலங்கைக்கு வழங்கி, கடனை உயர்த்திக் கொண்டது. இதன் மூலம், சீனாவிடம் இலங்கை வசமாக சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, சீனா சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீனாவின் “யுவான் வாங்-5” உளவுக் கப்பல் இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்துக்கு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதற்கு, இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதோடு, அக்கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனாலும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, அக்கப்பல் ஹம்பன்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு நிலைகளை அக்கப்பல் உளவுப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நீர்வள ஆராய்ச்சி என்கிற பெயரில் சீனா மற்றொரு உளவுக் கப்பலை அக்டோபர் மாதம் அனுப்ப இருக்கிறது. இதற்கு அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அனுமதி அளித்திருக்கிறார். இதற்கும் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில்தான், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இப்பயணத்தின்போது, சீனா கப்பல் வருகைக்கு, இலங்கை அதிபர் ரணிலிடம் நேரில் தனது அதிருப்தியைத் தெரிவிக்கவிருக்கிறார் ராஜ்நாத் சிங். அதோடு, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் மண்டபம் பகுதி வரை தரைப்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, காரைக்காலில் இருந்து கொழும்புக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்குவது நீண்டகாலமாக பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும், காட்டுநாயக்கன் விமானத் தளத்தை சீரமைத்து இந்தியாவிலிருந்து யாழ்பாணத்துக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதும் பரிசீலனையில் இருந்து வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு வந்த இலங்கை அதிபரி ரணில் விக்ரமசிங்கே, இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அதேபோல, இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது, இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு இன்னும் அமல்படுத்தாமல் இருப்பது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க வலியுறுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக இலங்கை அரசுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

Tags: Central MinisterRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ரஜினி!… இணையத்தில் வீடியோ வைரல்!

Next Post

அமெரிக்கா ஓபன் டென்னிஸ்- ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related News

வாணியம்பாடி அருகே இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

அஜித் கொலை வழக்கு – சக்தீஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு!

டிரினிடாட் மற்றும் டெபாகோ வாழ் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு விசா – பிரதமர் மோடி

சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றம் பிளிட்ஸ் செஸ் போட்டி – மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் முதலிடம்!

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

சிகரெட் சூடு, 44 காயங்கள், மூளையில் ரத்த கசிவு – அஜித் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies