சீன உளவுக் கப்பல் வருகை: இலங்கைக்கு ராஜ்நாத் சிங் திடீர் பயணம்!
Sep 13, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன உளவுக் கப்பல் வருகை: இலங்கைக்கு ராஜ்நாத் சிங் திடீர் பயணம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சீனாவின் ஆய்வுக் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்திருக்கும் நிலையில், ராஜ்நாத் சிங் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த இலங்கைத் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டிற்குச் சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல. காரணம், இலங்கைக்கு அந்தளவுக்கு சீனா கடன்களை வாரி வழங்கி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி, இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி, 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இது வெளித்தோற்றத்துக்கு துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறப்பட்டாலும், தங்களது உளவுக்கப்பலை இத்துறைமுகத்தில் நிலைநிறுத்தி இந்தியாவை உளவுப் பார்ப்பதுதான் சீனாவின் நோக்கம்.

இந்த சூழலில், இலங்கை கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து திவாலானது. அப்போது, அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் நிதியுதவி மற்றும் பொருளுதவி உட்படப் பல்வேறு வகையிலும் இந்தியா உதவிச் செய்தது. உணவுப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனா மீண்டும் ஏராளமான கடன்களை இலங்கைக்கு வழங்கி, கடனை உயர்த்திக் கொண்டது. இதன் மூலம், சீனாவிடம் இலங்கை வசமாக சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, சீனா சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீனாவின் “யுவான் வாங்-5” உளவுக் கப்பல் இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்துக்கு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதற்கு, இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதோடு, அக்கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனாலும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, அக்கப்பல் ஹம்பன்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு நிலைகளை அக்கப்பல் உளவுப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நீர்வள ஆராய்ச்சி என்கிற பெயரில் சீனா மற்றொரு உளவுக் கப்பலை அக்டோபர் மாதம் அனுப்ப இருக்கிறது. இதற்கு அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அனுமதி அளித்திருக்கிறார். இதற்கும் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில்தான், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இப்பயணத்தின்போது, சீனா கப்பல் வருகைக்கு, இலங்கை அதிபர் ரணிலிடம் நேரில் தனது அதிருப்தியைத் தெரிவிக்கவிருக்கிறார் ராஜ்நாத் சிங். அதோடு, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் மண்டபம் பகுதி வரை தரைப்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, காரைக்காலில் இருந்து கொழும்புக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்குவது நீண்டகாலமாக பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும், காட்டுநாயக்கன் விமானத் தளத்தை சீரமைத்து இந்தியாவிலிருந்து யாழ்பாணத்துக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதும் பரிசீலனையில் இருந்து வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு வந்த இலங்கை அதிபரி ரணில் விக்ரமசிங்கே, இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அதேபோல, இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது, இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு இன்னும் அமல்படுத்தாமல் இருப்பது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க வலியுறுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக இலங்கை அரசுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

Tags: Central MinisterRajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ரஜினி!… இணையத்தில் வீடியோ வைரல்!

Next Post

அமெரிக்கா ஓபன் டென்னிஸ்- ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies