பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!
Jul 26, 2025, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!

ஜம்மு காஷ்மீரில் இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் எதிரொலி!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கை குழு மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்தி வரும் பரிவர்தன் யாத்திரையில் கலந்துகொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு இரு தரப்புப் போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. எல்லையில் தாக்குதல், ஊடுருவல் சம்பவங்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, அதனுடன் கிரிக்கெட் உறவை தொடங்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது நடைபெற்று வரும் 2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானில் இந்தியா விளையாட வேண்டிய போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012 – 2013 காலகட்டத்தில் இரு தரப்பு போட்டியில் விளையாடியது. இதன் பிறகு, இரு நாடுகளும் ஐ.சி.சி. போட்டிகளிலும் மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியது. கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணிற்கே சென்று இந்தியா இரு தரப்பு தொடரில் விளையாடியது. இதுவே இந்தியா முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CricketIndiapakistanWill not playAnurag Thakur
ShareTweetSendShare
Previous Post

தொழில் அதிபர்களை உருவாக்கும் திட்டமே விஸ்வகர்மா திட்டம் !– ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 

Next Post

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies