பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!
Jun 5, 2025, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது: மத்திய அமைச்சர் தகவல்!

ஜம்மு காஷ்மீரில் இராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் எதிரொலி!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து, இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்து தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டு நடவடிக்கை குழு மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வினர் நடத்தி வரும் பரிவர்தன் யாத்திரையில் கலந்துகொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் எந்தவொரு இரு தரப்புப் போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என்று பி.சி.சி.ஐ. நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தது. எல்லையில் தாக்குதல், ஊடுருவல் சம்பவங்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, அதனுடன் கிரிக்கெட் உறவை தொடங்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, தற்போது நடைபெற்று வரும் 2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதையடுத்து, பாகிஸ்தானில் இந்தியா விளையாட வேண்டிய போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2012 – 2013 காலகட்டத்தில் இரு தரப்பு போட்டியில் விளையாடியது. இதன் பிறகு, இரு நாடுகளும் ஐ.சி.சி. போட்டிகளிலும் மற்றும் ஆசியக் கோப்பையில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியது. கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணிற்கே சென்று இந்தியா இரு தரப்பு தொடரில் விளையாடியது. இதுவே இந்தியா முதலும் கடைசியுமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Anurag ThakurCricketIndiapakistanWill not play
ShareTweetSendShare
Previous Post

தொழில் அதிபர்களை உருவாக்கும் திட்டமே விஸ்வகர்மா திட்டம் !– ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 

Next Post

தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies