இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அரசின் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவண ராஜா அந்நாட்டைவிட்டு வெளியேறி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ரீ.சரவண ராஜா. இவர் குருந்தூர்மழை தொடர்பான வழக்கில் முக்கியக் கட்டளைகளை பிறப்பித்து தீர்ப்பளித்திருந்தார். ஆனால், நீதிபதி வழக்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் இருந்தும் தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இதையடுத்து, தான் வகித்து வந்த நீதிபதி பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் துறந்துவிட்டு, அந்நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் நீதிபதி ரீ.சரவண ராஜா.

இது தொடர்பாக நீதிபதி சரவண ராஜா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றி அமைக்குமாறு அரசுத் தரப்பால் தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.

மேலும், எனக்கான காவல்துறை பாதுகாப்பும் அண்மையில் குறைக்கப்பட்டது. அதோடு, உளவுப் பிரிவினரும், புலனாய்வாளர்களும் என்னை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர். இலங்கை அதிபரோ, கடந்த 21-ம் தேதி என்னை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றி அமைக்கும்படி அழுத்தம் கொடுத்தார். குருந்தூர்மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில், எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு 2 வழக்குகள் தொடரப்பட்டன.

ஆகவே, எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதி பதவிகள் உட்பட அனைத்தையும் துறந்து விட்டேன். இதுகுறித்த எனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23-ம் தேதியன்று பதிவுத் தபால் மூலம் நீதிச்சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், அவரது பதவி விலகல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலங்கை நாட்டை விட்டு வெளியேறி விட்டது தெரியவந்திருக்கிறது.

Tags: srilankaJudge
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

அருணாச்சல் மீது சீனாவுக்கு உரிமை இல்லை: பெமா காண்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies