அருணாச்சல் மீது சீனாவுக்கு உரிமை இல்லை: பெமா காண்டு!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல் மீது சீனாவுக்கு உரிமை இல்லை: பெமா காண்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதால், அதன் மீது சீனாவுக்கு உரிமை இல்லை என்று அம்மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வுஷூ வீரர்கள் 3 பேருக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது. இந்த சூழலில், “எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் சீனா ஒரு தேவையற்ற அரசியல் கோணத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது” என்று அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், 36-வது மூத்த தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2023 போட்டியின்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பெமா காண்டு, “அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு உரிமை இல்லை. வரலாற்றில் அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அது எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் சீனா ஒரு தேவையற்ற அரசியல் கோணத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது.

இப்படித்தான் சமீபத்தில் புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டது. ஆனால், சீனாவின் வரைப்படத்துக்கும் நம் நாட்டின் இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் சரியானதுதான். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியும் கலந்துகொள்ள முடியாததால், அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வெகுமதியாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்கவிருக்கிறோம்.

மேலும், 2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராவதற்கு 3 வீரர்களுக்கும் சிறந்த பயிற்சியை மாநில அரசு உறுதி செய்யும். அருணாச்சல பிரதேசம் பல்லுயிர் வளம் மிக்க மாநிலமாக உள்ளது. 80 சதவீத பரப்பளவு காடுகளால் சூழப்பட்டுள்ளது. தூய்மையான காற்றுடன் கூடிய மிக அழகான மாநிலம். சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு மிகவும் வரவேற்கப்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: arunachalcm khandu
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Next Post

அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies