அருணாச்சல் மீது சீனாவுக்கு உரிமை இல்லை: பெமா காண்டு!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல் மீது சீனாவுக்கு உரிமை இல்லை: பெமா காண்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதால், அதன் மீது சீனாவுக்கு உரிமை இல்லை என்று அம்மாநில முதல்வர் பெமா காண்டு தெரிவித்திருக்கிறார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வுஷூ வீரர்கள் 3 பேருக்கு விசா வழங்க சீனா மறுத்து விட்டது. இந்த சூழலில், “எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் சீனா ஒரு தேவையற்ற அரசியல் கோணத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது” என்று அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், 36-வது மூத்த தேசிய கயிறு இழுத்தல் சாம்பியன்ஷிப் 2023 போட்டியின்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பெமா காண்டு, “அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு உரிமை இல்லை. வரலாற்றில் அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அது எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் சீனா ஒரு தேவையற்ற அரசியல் கோணத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது.

இப்படித்தான் சமீபத்தில் புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டது. ஆனால், சீனாவின் வரைப்படத்துக்கும் நம் நாட்டின் இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் சரியானதுதான். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியும் கலந்துகொள்ள முடியாததால், அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வெகுமதியாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்கவிருக்கிறோம்.

மேலும், 2026-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராவதற்கு 3 வீரர்களுக்கும் சிறந்த பயிற்சியை மாநில அரசு உறுதி செய்யும். அருணாச்சல பிரதேசம் பல்லுயிர் வளம் மிக்க மாநிலமாக உள்ளது. 80 சதவீத பரப்பளவு காடுகளால் சூழப்பட்டுள்ளது. தூய்மையான காற்றுடன் கூடிய மிக அழகான மாநிலம். சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு மிகவும் வரவேற்கப்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: arunachalcm khandu
ShareTweetSendShare
Previous Post

இலங்கை அரசு அழுத்தம்: நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

Next Post

அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன் !

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies