உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.
Mar 15, 2026, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா கூட்டாண்மை வலுப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபுதாபி சேம்பர் ஏற்பாடு செய்திருந்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்நிலை வணிகத் தலைவர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிகரித்து வரும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது இரு தரப்பு வணிகங்களுக்கும் விரைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.

இந்தக் கூட்டாண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கியப் பங்கினை கோயல் வலியுறுத்தினார். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு என்றும், மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டின் அடிப்படையில் மிகப்பெரிய முதலீட்டாளர் என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒத்துழைப்பிற்கு வலுவான அடித்தளத்தை இது உருவாக்குகிறது என்று  கூறினார். இரு நாடுகளும் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன, இது தற்போதைய திறன்கள் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளுடன் இணைந்துள்ளது, இது இந்தக் கூட்டாண்மை செழிக்க உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வணிகங்களுக்கு ஒரு பெரிய சந்தையாக குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய மக்களின் சராசரி வயது 30-க்கும் குறைவாக இருக்கும் என்றும், 2047-க்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 டிரில்லியன் டாலரைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில்  இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் லட்சிய இலக்கு பற்றி எடுத்துரைத்தார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கான பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

Tags: Central Ministerpiyush goyal
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!

Next Post

கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தாக்கு!

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies