உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.
Jul 31, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.

Murugesan M by Murugesan M
Oct 6, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா கூட்டாண்மை வலுப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபுதாபி சேம்பர் ஏற்பாடு செய்திருந்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்நிலை வணிகத் தலைவர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிகரித்து வரும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது இரு தரப்பு வணிகங்களுக்கும் விரைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்றார்.

இந்தக் கூட்டாண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் முக்கியப் பங்கினை கோயல் வலியுறுத்தினார். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இலக்கு என்றும், மூன்றாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி மற்றும் அந்நிய நேரடி முதலீட்டின் அடிப்படையில் மிகப்பெரிய முதலீட்டாளர் என்று குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒத்துழைப்பிற்கு வலுவான அடித்தளத்தை இது உருவாக்குகிறது என்று  கூறினார். இரு நாடுகளும் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்கின்றன, இது தற்போதைய திறன்கள் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளுடன் இணைந்துள்ளது, இது இந்தக் கூட்டாண்மை செழிக்க உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள வணிகங்களுக்கு ஒரு பெரிய சந்தையாக குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டார். அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய மக்களின் சராசரி வயது 30-க்கும் குறைவாக இருக்கும் என்றும், 2047-க்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 டிரில்லியன் டாலரைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில்  இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் லட்சிய இலக்கு பற்றி எடுத்துரைத்தார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கான பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

Tags: Central Ministerpiyush goyal
ShareTweetSendShare
Previous Post

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!

Next Post

கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி தாக்கு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies