தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!
Sep 14, 2026, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி: அமித்ஷா பெருமிதம்!

புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத அளவுக்கு செயல்படவும் அறிவுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 02:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன என்று பெருமிதம் தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத அளவுக்கு செயல்படவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) ஏற்பாடு செய்திருந்த 2 நாள் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய அமித்ஷா, “கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. என்.ஐ.ஏ.வின் கீழ் மாதிரி பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளின் விசாரணையின் படிநிலை, கட்டமைப்பு மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், மத்திய, மாநில அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். புதிய தீவிரவாத அமைப்பை உருவாக்க முடியாத வகையில், அனைத்து தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளும் இரக்கமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

என்.ஐ.ஏ., தீவிரவாத எதிர்ப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றின் பணி, விசாரணைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான புதுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உலக அளவில் இருந்து அடிமட்டம் வரை ஒத்துழைப்புத் தேவை.

மேலும், கிரிப்டோ, ஹவாலா, தீவிரவாத நிதியளிப்பு, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள், தீவிரவாதத் தொடர்புகள் போன்ற அனைத்து சவால்களிலும் பிரதமர் நரேந்திர மோடி அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஆனாலும், இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பதக்கங்களையும் அமித்ஷா வழங்கினார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “டெல்லியில் நடைபெற்ற 3-வது பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நமது தேசம் தீவிரவாதத்தை ஒழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு அமைப்புகளின் தொடர்ச்சியான முயற்சிகள், நமது நாடு அதன் இலக்கை விரைவில் அடைவதை உறுதி செய்யும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

At the 3rd Anti-terror Conference held in Delhi today distributed medals to the best performing NIA officers. Under the leadership of PM @narendramodi Ji our nation has adopted the goal of eradicating terrorism. The continued efforts of the anti-terror agencies will ensure that… pic.twitter.com/2cQnW9WZov

— Amit Shah (@AmitShah) October 5, 2023

 

Tags: NiaAmitsha3rd Conference
Share
Tweet
SendShare
Previous Post

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – தூங்கி வழியும் தமிழக அரசு!

Next Post

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்!- பியூஷ் கோயல்.

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies