தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்
Jul 26, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்

Web Desk by Web Desk
Oct 7, 2023, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனக் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 -ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குக் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது, 12,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குக் கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் 15 -ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்திற்கு உறுதியாகத் தண்ணீர் தரமுடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் எனக் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனக் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

இதனால், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசைக் கண்டித்து, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முழு வீச்சில் போராட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, போராட்டத்தை முடக்கும் வகையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் ரகசியமாக ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: tamilnadukarnatakaCauvery issue
ShareTweetSendShare
Previous Post

சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 103 பேரின் கதி?

Next Post

தமிழக ஆளுநருடன் ஆஸ்திரேலியா தூதர் திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies