தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்
Mar 15, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் – 11 -ம் தேதி டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம்

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 7, 2023, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனக் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 -ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குக் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது, 12,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்குக் கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் 15 -ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்திற்கு உறுதியாகத் தண்ணீர் தரமுடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் எனக் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனக் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

இதனால், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசைக் கண்டித்து, காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முழு வீச்சில் போராட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, போராட்டத்தை முடக்கும் வகையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் ரகசியமாக ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: tamilnadukarnatakaCauvery issue
ShareTweetSendShare
Previous Post

சிக்கிம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு! 103 பேரின் கதி?

Next Post

தமிழக ஆளுநருடன் ஆஸ்திரேலியா தூதர் திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies