5 மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டம்!
Jul 25, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டம்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, மிசோராம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 என 2 கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

இத்தேர்தலை முன்னிட்டு, மேற்கண்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. அறிவித்து வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 136 இடங்களுக்கும், சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 85 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.

மேலும், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு வெறும் 41 கொண்ட பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல, மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 21 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதேசமயம், தெலங்கானா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தலைநகர் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இரவு 7 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார்.

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், தேர்தல் குழுவின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யவிருக்கிறார்கள்.

Tags: PM ModibjpAmitshaNaddaCEC meeting
ShareTweetSendShare
Previous Post

தவத்திரு பங்காரு அடிகளாருக்கு ஆர்எஸ்எஸ் அஞ்சலி!

Next Post

உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

Related News

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies