5 மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டம்!
Jul 29, 2026, 05:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, மிசோராம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதியும், சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 என 2 கட்டங்களாகவும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

இத்தேர்தலை முன்னிட்டு, மேற்கண்ட மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. அறிவித்து வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 136 இடங்களுக்கும், சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 85 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.

மேலும், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு வெறும் 41 கொண்ட பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல, மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 21 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. அதேசமயம், தெலங்கானா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக, பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தலைநகர் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இரவு 7 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார்.

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், தேர்தல் குழுவின் உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யவிருக்கிறார்கள்.

Tags: PM ModibjpAmitshaNaddaCEC meeting
ShareTweetSendShare
Previous Post

தவத்திரு பங்காரு அடிகளாருக்கு ஆர்எஸ்எஸ் அஞ்சலி!

Next Post

உங்களின் அசைக்க முடியாத ஆதரவு எனக்கு உண்டு என்பதில் உறுதியாக இருக்கிறேன்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies