ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!
Jul 24, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தரிசனம் செய்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை ஷீரடியில் உள்ள ஸ்ரீசாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் புதிய தரிசன வரிசை வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய தரிசன வரிசை வளாகம், பக்தர்களுக்கு வசதியான காத்திருப்புப் பகுதிகளை வழங்கும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமரும் வசதியுடன் கூடிய பல காத்திருப்பு அரங்குகள் உள்ளன. மேலும், இங்கு பக்தர்களின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட ஆடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், முன்பதிவு மற்றும் பிரசாத கவுன்ட்டர்கள், தகவல் மையம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த புதிய தரிசன வரிசை வளாகத்தின் அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின்போது,  நில்வண்டே அணையின் ‘ஜல் பூஜை’ மற்றும் அணையின் கால்வாய் வலையமைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி,  ​’நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதல் தொகை கிடைக்கும்.

மேலும், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது தவிர, குர்துவாடி-லத்தூர் சாலை இரயில் பிரிவு மின்மயமாக்கல், ஜல்கானை புசாவலுடன் இணைக்கும் 3-வது மற்றும் 4-வது இரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை 166-ன் (தொகுப்பு-I) சாங்க்லி முதல் போர்கான் வரையிலான 4 வழிச்சாலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் மன்மட் டெர்மினலில் கூடுதல் வசதிகள், அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு ஆகிய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: PM ModiMaharastraShirdi sai baba temple
ShareTweetSendShare
Previous Post

பாடப்புத்தகங்களில் “பாரதம்” பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!

Next Post

மிசோராம் மாநிலத் தேர்தல்: 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள்!

Related News

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies