ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!
Nov 18, 2025, 12:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆம்பர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.

குறிப்பாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என பார்த்துப் பார்த்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சுற்றுலா, வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானின் நிலை என்ன? குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 55, 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்.

குறிப்பாக, இந்த 9 ஆண்டுகளில் 12 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை, 4 கோடி பேருக்கு வீடு, 4 கோடி பேருக்கு மின் இணைப்பு, 10 கோடி ஏழைகளுக்கு உஜ்வாலா யோஜனா இணைப்பு ஆகியவை கிடைத்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சியில் இராம நவமி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசு, அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டி இருக்கிறது” என்றார்.

Tags: uttar pradeshElectionCm Yogi AdityanathRajasthanCompaign
ShareTweetSendShare
Previous Post

கோவில் சொத்துக்கள் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை!

Next Post

“ஒரே நாடு, ஒரே தேர்தலை”அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்! – ராம்நாத் கோவிந்த்

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies