ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!
Jul 4, 2025, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆம்பர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.

குறிப்பாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என பார்த்துப் பார்த்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சுற்றுலா, வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானின் நிலை என்ன? குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 55, 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்.

குறிப்பாக, இந்த 9 ஆண்டுகளில் 12 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை, 4 கோடி பேருக்கு வீடு, 4 கோடி பேருக்கு மின் இணைப்பு, 10 கோடி ஏழைகளுக்கு உஜ்வாலா யோஜனா இணைப்பு ஆகியவை கிடைத்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சியில் இராம நவமி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசு, அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டி இருக்கிறது” என்றார்.

Tags: ElectionCm Yogi AdityanathRajasthanCompaignuttar pradesh
ShareTweetSendShare
Previous Post

கோவில் சொத்துக்கள் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை!

Next Post

“ஒரே நாடு, ஒரே தேர்தலை”அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்! – ராம்நாத் கோவிந்த்

Related News

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

அதிமுக உட்கட்சி விவகாரம் : காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

புதுக்கோட்டை : ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – விவசாயிகள் திடீர் போராட்டம்!

மேலூர் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!

கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies