ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!
Jun 14, 2026, 09:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்திருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஆம்பர் சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “5 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சி அடையும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.

குறிப்பாக, ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என பார்த்துப் பார்த்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சுற்றுலா, வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானின் நிலை என்ன? குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 55, 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, பிரதமர் மோடி 9 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்.

குறிப்பாக, இந்த 9 ஆண்டுகளில் 12 கோடி ஏழைகளுக்கு கழிப்பறை, 4 கோடி பேருக்கு வீடு, 4 கோடி பேருக்கு மின் இணைப்பு, 10 கோடி ஏழைகளுக்கு உஜ்வாலா யோஜனா இணைப்பு ஆகியவை கிடைத்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சியில் இராம நவமி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், பா.ஜ.க.வின் இரட்டை இன்ஜின் அரசு, அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டி இருக்கிறது” என்றார்.

Tags: uttar pradeshElectionCm Yogi AdityanathRajasthanCompaign
ShareTweetSendShare
Previous Post

கோவில் சொத்துக்கள் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை!

Next Post

“ஒரே நாடு, ஒரே தேர்தலை”அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்! – ராம்நாத் கோவிந்த்

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies