கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!
Sep 10, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 24, 2023, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள் அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருக்கின்றனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், துறவி மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ‘சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உத்தரப் பிரதேசத்துக்குச் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமியில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, துறவி மீரா பாயின் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு உரையாற்றுகையில், “பிரஜுக்கும் குஜராத்துக்கும் தனித் தொடர்பு உள்ளது. மதுராவின் கன்ஹா குஜராத் சென்ற பிறகு துவாரகதீஷ் ஆனார். அதேபோல, ராஜஸ்தானில் இருந்து மதுரா வந்த புனித மீரா பாய், துவாரகாவில் தனது கடைசி காலங்களைக் கழித்தார்.

பிருந்தாவனம் இல்லாமல் புனித மீராவின் வழிபாடு முழுமையடையாது. நமது மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக, மீரா பாய் குடும்பமும், ராஜஸ்தான் மக்களும் தங்களிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்தார்கள். இந்தியாவின் ஆன்மாவைக் காக்க ராஜஸ்தான் மக்களிடையே சுவர் போல நின்றார்கள். அந்தத் தியாகத்தையும், வீரத்தையும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தப் பகுதி (பிராஜின்) பாதகமான காலங்களில் நாட்டைக் கவனித்துக் கொண்டது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்தபோது, ​​பிரஜுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ஆகவே, இந்திய வரலாற்றிலிருந்து மக்கள் துண்டிக்க விரும்பினர். இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள், அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருந்து வருகிறார்கள்.

எவ்வித வளர்ச்சியுமின்றி பிரஜை வைத்திருந்தார்கள். இன்று ஆசாதி கா அமிர்தகாலத்தில், அடிமை மனநிலையிலிருந்து நாடு வெளியே வருகிறது. நாம் நம் பாரம்பரியத்தில் பெருமையுடன் முன்னோக்கி செல்கிறோம். காசியில் விஸ்வநாதர் கோவிலும், உஜ்ஜைனி மகாகால் கோவில் பிரமாண்டமும் முழு மகிமையுடன் நம் முன்னே உள்ளது.

தற்போது, ​​அயோத்தியில் இராமர் கோவில் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரா மற்றும் பிரஜ் இந்த வளர்ச்சியின் சங்கிலியில் இரு்து பின்தங்க விடமாட்டேன். மதுராவில் தரிசனம் விரைவில் இன்னும் கூடுதலான தெய்வீகத்துடன் நடக்கும்” என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்று பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “உலகின் 190 நாடுகளில் யோகாவை பரப்பினீர்கள். கடந்த 9 ஆண்டுகளாக ​​மதுரா, பிருந்தாவனம் மற்றும் அனைத்து யாத்ரீக ஸ்தலங்களும் பலன் பெறுகின்றன. மேலும், அயோத்தியில் சாத்தியமில்லாத ஒன்று ஜனவரி 22-ம் தேதியன்று உங்கள் தலைமையில் நடக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

Tags: PM ModiMathuraSant Mira Bai
ShareTweetSendShare
Previous Post

செவிலியர் பணி செய்யும் ரோபோ: மாணவரின் அசத்தல் கண்டுப்பிடிப்பு

Next Post

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : ஆஸ்திரேலியா பேட்டிங் !

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies