கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!
Jun 4, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 09:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள் அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருக்கின்றனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், துறவி மீராபாயின் 525-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ‘சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உத்தரப் பிரதேசத்துக்குச் சென்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமியில் சுவாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, துறவி மீரா பாயின் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு உரையாற்றுகையில், “பிரஜுக்கும் குஜராத்துக்கும் தனித் தொடர்பு உள்ளது. மதுராவின் கன்ஹா குஜராத் சென்ற பிறகு துவாரகதீஷ் ஆனார். அதேபோல, ராஜஸ்தானில் இருந்து மதுரா வந்த புனித மீரா பாய், துவாரகாவில் தனது கடைசி காலங்களைக் கழித்தார்.

பிருந்தாவனம் இல்லாமல் புனித மீராவின் வழிபாடு முழுமையடையாது. நமது மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக, மீரா பாய் குடும்பமும், ராஜஸ்தான் மக்களும் தங்களிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்தார்கள். இந்தியாவின் ஆன்மாவைக் காக்க ராஜஸ்தான் மக்களிடையே சுவர் போல நின்றார்கள். அந்தத் தியாகத்தையும், வீரத்தையும் இந்த நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தப் பகுதி (பிராஜின்) பாதகமான காலங்களில் நாட்டைக் கவனித்துக் கொண்டது. ஆனால், நாடு சுதந்திரம் அடைந்தபோது, ​​பிரஜுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ஆகவே, இந்திய வரலாற்றிலிருந்து மக்கள் துண்டிக்க விரும்பினர். இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள், அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருந்து வருகிறார்கள்.

எவ்வித வளர்ச்சியுமின்றி பிரஜை வைத்திருந்தார்கள். இன்று ஆசாதி கா அமிர்தகாலத்தில், அடிமை மனநிலையிலிருந்து நாடு வெளியே வருகிறது. நாம் நம் பாரம்பரியத்தில் பெருமையுடன் முன்னோக்கி செல்கிறோம். காசியில் விஸ்வநாதர் கோவிலும், உஜ்ஜைனி மகாகால் கோவில் பிரமாண்டமும் முழு மகிமையுடன் நம் முன்னே உள்ளது.

தற்போது, ​​அயோத்தியில் இராமர் கோவில் திறப்பு விழா தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரா மற்றும் பிரஜ் இந்த வளர்ச்சியின் சங்கிலியில் இரு்து பின்தங்க விடமாட்டேன். மதுராவில் தரிசனம் விரைவில் இன்னும் கூடுதலான தெய்வீகத்துடன் நடக்கும்” என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடியை வரவேற்று பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “உலகின் 190 நாடுகளில் யோகாவை பரப்பினீர்கள். கடந்த 9 ஆண்டுகளாக ​​மதுரா, பிருந்தாவனம் மற்றும் அனைத்து யாத்ரீக ஸ்தலங்களும் பலன் பெறுகின்றன. மேலும், அயோத்தியில் சாத்தியமில்லாத ஒன்று ஜனவரி 22-ம் தேதியன்று உங்கள் தலைமையில் நடக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

Tags: PM ModiMathuraSant Mira Bai
ShareTweetSendShare
Previous Post

செவிலியர் பணி செய்யும் ரோபோ: மாணவரின் அசத்தல் கண்டுப்பிடிப்பு

Next Post

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : ஆஸ்திரேலியா பேட்டிங் !

Related News

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies