ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு!
Mar 18, 2026, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, கடந்த 7-ம் தேதி 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்துக்கும், கடந்த 17-ம் தேதி 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. மேலும், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் நிறைந்த 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதியும், மிதமுள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 17-ம் தேதியும் என 2 கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

இதையடுத்து, மீதமுள்ள 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளையும் (25-ம் தேதி), 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்துக்கு 30-ம் தேதியும் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. எனவே, மேற்கண்ட 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில், கரண்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மிந்த் சிங் கூனார் உயிரிழந்து விட்டதால், மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இம்மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இதையொட்டி, மாநிலத்தில் மொத்தம் 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தேர்தலில் 183 பெண்கள் உட்பட 1,875 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

Tags: bjpElectionCongressRajasthan
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : மத்திய பிரதேசம் அபார வெற்றி !

Next Post

கன்னித்தன்மையை பரிசோதிக்கும் இருவிரல் பரிசோதனை

Related News

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி இண்டி கூட்டணியில் குழப்பம் – தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டையில் திமுக எம்எல்ஏ மனுத்தாக்கல்!

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies