ஆசியக் கோப்பை U-19 தொடரின் இன்றையப் போட்டியில் வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் மற்றும் இலங்கை – ஜப்பான் அணிகளும் மோதுகின்றன.
10- வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் நேற்று துபாயில் தொடங்கியது. இத்தொடர் வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் போட்டியில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் இலங்கை மற்றும் ஜப்பான் அணிகள் களம் காண்கின்றன. இப்போட்டி 50 ஓவர்கள் வடிவில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த இரு போட்டிகளும் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை தோற்கடித்தது.
இந்த இரு போட்டிகளிலும் சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டிகளிலும் சேசிங் செய்யும் அணியே வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் உள்ள இரண்டு மைதானங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெறவுள்ளது ஆகையால் இன்று டாஸில் வெற்றி பெறும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.