தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!
Jul 26, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்துள்ளது ஒரு குழந்தை. அந்த குழந்தையின் உடலை, Shroud எனச் சொல்லக்கூடிய துணியில் சுத்தி கொடுக்காமல், வெறுமனே அட்டை டப்பாவில் வைத்து, பெற்றோரிடம் பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் வழங்கியுள்ளார். மனித நேயமற்ற இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து அந்த குழந்தையின் உடலை எடுத்துச் சென்ற குழந்தையின் பெற்றோர் இரத்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.ஒரு பக்கம் குழந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மறு பக்கம், இறந்துபோன குழந்தையை முறைப்படி வழங்காமல்…தமிழக மருத்துவத்துறை ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதை நினைத்து நினைத்து தாங்க முடியாத துக்கத்தை வெளியே சொல்ல முடியாமல், குழந்தையின் பெற்றோர், இடுகாட்டில் கண்ணீர் மல்க குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தெய்வமே இது தகுமா? என இடிந்துபோய் உட்கார்ந்த போது, அவர்களைத் தேற்ற யாராலும் முடியவில்லை.

இந்நிலையில், திமுக அரசின் தரம் கெட்ட இந்த செயலை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாரத்தான்களை நடத்துவதிலும், முதலமைச்சரின் தவறுகளைப் பாதுகாப்பதிலும் மும்முரமாக உள்ளார். நாட்டில் ஒரு காலத்தில் தேடப்பட்டு வந்த மருத்துவக் கட்டமைப்பு இன்று ஊழலில் திளைக்கும் திமுக அரசின் கீழ் அடிமட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் திரும்பப் பெற முடியாத நிலையை அடையும் அபாயம் உள்ளது.

வலியால் துடித்த பெண்ணைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை, அவரது குழந்தையின் சடலம் அட்டைப்பெட்டியில் சென்னை அரசு மருத்துவமனையால் வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ள மக்கள் படும் இன்னல்களுக்கு இழப்பீடு அறிவிப்போ, பெயரளவுக்கு இடைநீக்கம் செய்வதோ தீர்வாகாது என்பதையும், மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையும் திமுக அரசு உணர வேண்டிய தருணம் இது என குட்டு வைத்துள்ளார்.

என்ன செய்யப்போகிறது திமுக அரசு?

Tags: kilpakkam govt hospitalchild death issuebjpannamalaitamilnadu government
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் : இந்திய மகளிர் அணி வெற்றி!

Next Post

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies