இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் : இந்திய மகளிர் அணி வெற்றி!
Jul 30, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் : இந்திய மகளிர் அணி வெற்றி!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சோபியா டங்க்லி மற்றும் மியா ஆகியோர் களமிறங்கினர்.

முதல் ஓவரில் 3 வது பந்திலேயே மியா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த இரண்டு ஓவரிலேயே சோபியா டங்க்லி 1 சிக்சர் மற்றும் 1 பௌண்டரி அடித்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் சிறப்பாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய எமி ஜோன்ஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்பு களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக சைகா இஷாக் மற்றும் ஸ்ரேயங்கா பட்டீல் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ரேனுகா சிங் மற்றும் அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷாபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர். 3 வது ஓவரின் முதல் பந்தில் ஷாபாலி அருமை 6 ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா, மந்தனா கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.

12 வது ஓவரில் ஜெமிமா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய தீப்தி சர்மா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த மந்தனா 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக 19 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்த வெற்றி பெற்றது. . இருப்பினும் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து அணிக்கே கோப்பை வழங்கப்பட்டது.

மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகி விருதை 4 ஓவர்கள் பந்துவீசி 19 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய ஸ்ரேயங்கா பட்டீலுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகி விருது இங்கிலாந்து அணியின் நாட் ஸ்கிவர்-ப்ரண்டுக்கு வழங்கப்பட்டது.

 

 

Tags: india winmumbaiINIDAenglandindia vs englandt20india wonindian womens team
ShareTweetSendShare
Previous Post

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

Next Post

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies